Monday, January 6, 2014

மறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .

மறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .
நெஞ்சில் நிறைவாக உள்ளதால் பகிர மனம் நாடுகிறது .
எங்கு சென்றாலும் இதயம் இவ்விடத்தை காணத் துடிக்கின்றது
அன்பால் கட்டிப்போட்டவர்
கருத்தால் கவரப் பட்டவர்
குருதி தொடர்பு மிக்கவர்
கொள்கை பிடிப்பு உள்ளவர்
தொடர்பை நாடி நிற்பவர்
தொலை தூரத்தில் இருந்து காட்சி தருபவர்
இன்னும் இன்னும் ...எத்தனையோ இங்கிருந்து
காந்தம் போல் இழுக்கிறது
/
/
/
கவலை மறைகிறது
மகிழ்வு கூடுகிறது
அறிவு சேர்கிறது
நட்பின் ஆழம் தெரிகிறது
என்னையே அறிய வைக்கின்றது
என்னை நான் அறிய
இறைவழி தெரிகிறது
பிறப்பின் பலனை
சேவையில் செயல் பட வைக்கிறது
நன்மை நான் அறியாமலேயே
என்னை வந்தடைகிறது
வாழ்த்துகள் குவிகிறது
வாழ விரும்புகிறது
அனைத்தும் இறைவன் நாட்டம்

No comments: