Friday, January 10, 2014

அனைத்துக்கும் ஆசிரியன் இறைவன்


அனைத்துக்கும் ஆசிரியன் இறைவன்
அனைத்து ஆசிரியர்களும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்
அனைத்து ஆசிரியர்களில் சிலரை சிறப்பு ஆசிரியர்களாய் தந்தான்
அந்த சிறந்த ஆசிரியர்களிடமிருந்து நாம் பெற்ற அறிவு சிறப்பானது
அந்த சிறந்த அறிவைக் கொண்டு நல்லவை அல்லவை அறிந்தோம்
நல்லவை அறிந்து அல்லவை நீக்கி நல்வழி வாழ வழி வகுத்தோம்
நல்வழி உறுதியான உள்ளம் தந்து நம்மை உறுதியான உயர்வான வாழ்வை தருகிறது


இறைவன் நமக்கு சிறப்பு ஆசிரியர்களை தந்தது நம் வாழ்வை உயர்த்தி வைக்கவே
'உங்களில் உயர்ந்தோர் நீங்கள் கற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவரே ' என்பது
இறைவன் அனுப்பிய நாயகத்தின் சொல்லாக இருப்பதும் நாம் அறிந்ததே
அவர் இருலோகத்தின் மாண்பையும் விளங்க வைத்து
இறைவனின் மாண்பையும் அறிய வைத்தார்
இறைவனின் படைப்பை அறிந்தமையால் அவனை தொழுது வாழ்ந்து
இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து
நிலையான சுவன நல்வாழ்வை இறைவனிடமே நாடி நிற்கிறோம்

No comments: