Saturday, February 1, 2014

சமுதாயத்தின் ஒற்றுமை உயர்வை தரும்

உள் மனதின் நம்பிக்கை அதிகம்
உடல் உணர்வுகள் உயர்வு
வலிமை உயர்வை தருகிறது
கவனக் குறைவு தடுமாறுகிறது
அறிவு வழி காட்டுகிறது

தன்னை உருவாக்க தன் முயற்சி
தன்னை உயர்த்த பிறரை தாழ்த்தி அல்ல
தன்னை மேம் படுத்த சமுதாயம் தேவை
தன்னை உயர்த்துவதே சமுதாய மேம்பாடுக்கே
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமுதாயமாக முடியாது
தனி மனிதனின் உயர்வு சமுதாயத்தில் அடக்கம்
தனித்து வாழ விரும்புவன்
வழி தவறிய மனிதன்

காட்டில் வாழும் மிருகங்களும் கூடியே வாழும்
நாட்டில் வாழும் மனிதருக்கு கூடி வாழும் மனம் குறைகிறது

நம் நம்பிக்கை நமக்கு உயர்வு
அவர் நம்பிக்கை அவருக்கு சிறப்பு
இரு வழி வழி ஒரு குறிக்கோள்
இரு வழி வழியும் ஓரிடத்தில் ஒன்று சேர்கிறது
இரு வழியும் சிறப்பை தருகிறது
ஒற்றுமை என்ற உறுதி மனதுடன்
இரு வழிகளில் ஒன்று பழுதடைய
ஒரே வழிகளில் ஒன்று சேர்ந்து போவது
ஒற்றுமை வழியை நாடி நிற்கிறது


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்... பட விளக்கமும் அருமை...

வாழ்த்துக்கள்...