Monday, April 21, 2014

எதிர்பார்க்கும் போது கிடைக்காத பாசம்

எதிர்பார்க்கும் போது
கிடைக்காத பாசம்
எப்பொழுதேனும்
கிடைத்திடுமா?

இருவேறு திசையில்
பயணிக்கும் நாமும்
எதிர் எதிர் காணும்
நாள் வருமா?

காகத்தின் எச்சம் விதைத்த
விதை போல நானும்
புவிமீது வந்ததென்ன
என் ஆசையோ!

ஏக்கத்தை விழிகள் தாங்க
விழி நோக்கும் பாவை
விழி நீரின் துளிகள்
நிகழ்வை அழித்திடுமோ

நினைவுகள் எழும்பும் இயல்பில்
ஒரு நினைவேனும்
மகளென என்னை என்றும்
தேடவில்லையோ?

GJ Thamilselvi

No comments: