Tuesday, April 29, 2014

பாவம் உண்மையும் அவரோடு சேர்த்து புதைக்கப்பட்டு விட்டது!

காத்து,கருப்பு
பேய், பிசாசு இல்லை
பில்லியாவது, சூனியமாவது
எல்லாம் சுத்த ஹம்பக்-என்று
எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கு
எதிராகவே பேசிவந்த
மூலை வீட்டு தாத்தா
திடீரென்று ரத்தம் கக்கி
செத்துப்போனார் போனார்...



அவருக்கு யாரோ
சூன்யம் வைத்து
சாகடித்து விட்டார்களாம்
அதனால் அவர் இனி
ஆவியா அலைவார்
என்றெல்லாம் ஊரில்
பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் தாத்தாவுக்கு
மட்டுமே தெரியும்
தன்னை கவனிக்க
ஆளில்லையே என்ற
கவலையில் மருந்து குடித்து
செத்துப்போன விஷயம்...
ஊர்க்காரர்களிடம் கற்பனைகளை
உலாவவிட்டுவிட்டு
பாவம் உண்மையும் அவரோடு சேர்த்து
புதைக்கப்பட்டு விட்டது.
#தாத்தாத்துவம்
பேய்க்கு பயப்படாதவன் கூட நாய்க்கும் நோய்க்கும் பயப்படுவான்.
#பேய்த்துவம்.
  
ரஹீம் கஸாலி



 ----------------------------------------------------------------------------
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம்  உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி    காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

No comments: