Friday, May 23, 2014

தாயே உன் புன்னகைப் பரிமாறலில் என் முகவரியும் கூட சேர்ந்தே மண மணக்கும்

அத்தனையும்
இனிக்கும்
அக்கறையாய்
அன்பினையும்
சேர்த்து
பெற்றவள்
பரிமாறும்
உணவுக்கு
முன்னால்
முக்கனியும்
சுவைத்தோற்கும்
முன் நாக்கில்
தேனூறும்

பிட்சாவும்
பர்கரும்
குறைப்பிரசவ
கோழி வறுவலும்
பேச்சுக்கு
மட்டுமே
மணக்கும்

உன் பூசாத
பூரண அன்பினாலே
பொங்கி வடித்த
அத்தனை
உணவிலும்
என் மூச்சும்
மணக்கும்
தாயே
உன் புன்னகைப்
பரிமாறலில்
என் முகவரியும்
கூட சேர்ந்தே
மண மணக்கும்

 
 
 
 
 
  
தமிழ்ப்ரியன் நசீர்

No comments: