Monday, June 9, 2014

தோழ்சாய்நத நினைவுகள்

தோழ்சாய்நத நினைவுகள்
.......................... .....................
மண்ணொன்றாய்
மகிழ அருந்திய
நீரொன்றாய்
பின்னொன்றாய்த் தழுவிய
புவிகாற்றொன்றாய
கண்ணொன்றாய்
கண்தொட்டப்
பகல் ஒளிவொன்றாய
பருவத்துளிர்த்தொட்டவரை
ஒவ்வொன்றாய்
வேர் பிணைந்த செடிகளின்று
மண்விட்டு மனைத்தாண்டி
பூவிட்டு காய்கண்டு
கல்லடிக்கணைகளேற்றோம்
பசித்தோர்க்குப் பழமீண்டோம்
பிறர் படுத்துறங்க நிழலானோம்
விதையாய் விழுந்த மண்ணொன்று
விருட்சமான மண் மற்றொன்று
மண்வேறு மனைவேறயானாலும்கூட
கண்ணோடிணைந்த
இளங்காட்சிகளனைத்தும
கடைசிவரை ஒவ்வொன்றாய்
கவிச்சாமரம் வீசுதடா.....
அக்கருவெள்ளை கனவுகளை
காணும் தருணமெலாம
கண்ணிரண்டும் கூசுதடா.....

No comments: