Sunday, July 27, 2014

#7 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:07.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
.
விளக்கம் :
தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது.
.
குர்ஆன் : 10:25 & 26
. (மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே இணையற்ற இறைவனான அல்லாஹ் அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.. நன்மை செய்தவர்களுக்கு நன்மைதான். அதிகமாகவும் கிடைக்கும். அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்..

விளக்கம் :
இணையற்ற இறைவனான அல்லாஹ்வை வழிபடுபவர்களை கலவை சூழ்ந்துகொள்ளாது.
.
Reference :
1)http://www.tamililquran.com/qurandisp.php?q=கவலை&start=10#10:26
2) http://www.thirukkural.com/2009/01/1.html#7




 Rafeequl Islam T
  What does ISLAM really teach?
#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 #6 திருக்குறளும் திருக்குர்ஆனும்


No comments: