Saturday, July 5, 2014

நினைவழியா நாட்கள் என்ற கவிதை(ஒரு பகுதி) - அன்புடன் புகாரி

என்னை முதன் முதலில் நேரில் சந்தித்த தோழி ஒருவர், உங்கள் கவிதைகளில் இன்றைய உங்கள் முகம் இடாமல் ஏன் பழைய புகைப்படங்களாய் இடுகிறீர்கள் என்றார்.

இப்போதும் எப்போதும் நான் நான்தானே என்ற தத்துவார்த்த பதில் ஒருபுறம் இருக்க,

அந்தக் கவிதை எழுதும்போது எந்த முகமோ அதையே இட்டேன் என்று சாதுர்யமாய்ச் சொன்னது இன்னொரு புறம் இருக்க,

உண்மையான ஓர் உண்மையை இங்கே சொல்ல விழைகிறேன்

அன்றெல்லாம் நிறைய புகைப்படங்களை நானே எடுத்துக்கொண்டேன். இப்போதோ மற்றவர்கள் எடுத்து எனக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவை என் கைகளில் கிடைக்கும்போதும் அவற்றுள் எனக்குப் பிடித்தவை இருக்கும்போதும் அவற்றை நான் இடுவதற்கு அவகாசம் இருக்கும்போதும் அன்போடு இடுகிறேன். அவ்வளவுதான்! Tamilnadu Cultural Society of Canada
Kavi Mr.Buhari kavithai


நினைவழியா நாட்கள் என்ற கவிதையை தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்துக்கு வழங்கியதன் ஒரு பகுதி மட்டும் இதோ. நன்றி தல... சுதர்சன்.

முழுவதும் திரையாக்கப்படவில்லை ஆகவே தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் இருக்கும் ”இடை” இது

சில வாரங்களுக்கு முன் வாசித்தது.


No comments: