Monday, July 7, 2014

நோன்பின் மாண்பு...



களைப்பில் நா கவிழ்ந்தாலும்
குவளை நீருக்கு மனம்
விரும்பவில்லை;

உண்டுக்களிக்க; மென்று ரசிக்க
உணவுகள் இருந்தாலும் மனமது
உந்தவில்லை;

இருக்கும் பணத்தை கொடுக்காமலிருக்க
ஒளித்து வைக்கும் எண்ணமில்லை;

வாய்ப்பிருந்தும் அனல் பறக்க;யாரையும்
அழுத்தியெடுக்க நா எழவில்லை;

யாரும்.. வம்பிழுத்து வந்தாலும்
நான் நோன்பாளி என சொல்வதற்கு
மறக்கவில்லை;

கண்ணியம் பொருந்திய
மாதமென்பதில் கடுகளவும்
பொய்யில்லை!!

No comments: