Wednesday, August 13, 2014

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவனாய்..

 
 
ஓடியே தேய்கிறேன்
உன்னை தேடி
ஓயாமல் உழைக்கிறேன்
உன்னை சேர்க்க
உறங்காமல் விழிக்கிறேன்
உன்னை காக்க
உருண்டோடி விடுகிறாய்
சக்கரம் போல.


உயிருண்டு...............

ஒவ்வொன்றிற்கும் உயிருண்டு
படைத்தவன் படைப்பில்
உயிரோடும் உணர்வோடும்
உறவாடும் பண்புண்டு

தன்னினத்தாரை சார்ந்திருக்கும்
ஒற்றுமை உணர்வுண்டு
குழுவாய் கூடி வாழுகின்ற
கோடி நன்மையுண்டு

கேடு நினைக்கும்
கெடுதலில்லை
உற்றாரை கருவறுக்கும்
வஞ்சகமில்லை

பாழும் மனிதனுக்கு
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லாதவனாய்
வருந்தி வாழ்கிறான்.
--------------------------------------

மனம் அழுத்தம் கொண்டது
கவலை வந்தது
மனம் நிகிழ்ந்து கொண்டது
கவலை தீர்ந்தது

கண்கள் அழுத்தம் கொண்டது
உறக்கம் வந்தது
கண்கள் விழிப்பு கொண்டது
கனவு கலைந்தது
 
(எஸ். எஸ். அப்துல் காதர்)

No comments: