Tuesday, August 26, 2014

கமகமக்கும் கருவாட்டு சிப்ஸ்


சென்னையை சேர்ந்த பாத்திமாவும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மாஜித்தும் சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து கொண்டனர். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும்... அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யோசித்த இந்த தம்பதியினர் கண்டறிந்ததுதான் 'கருவாட்டு சிப்ஸ்'.

இப்போது சென்னாகுன்னி, நெத்திலி, இறால் போன்ற மீன்களிலிருந்து சிப்ஸ் தயாரிக்கும் இவர்கள் விரைவில் சுறா, வாள மீன்களிலிருந்தும் சிப்ஸ் தயாரிக்க இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சக்கைப்போடு போடும் இவர்களது 'கருவாட்டு சிப்ஸ்' ஹலால் முறைப்படி தயாராவதால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலும் பட்டையை கிளப்புகிறது. மொறு மொறு கமகம என்று நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் இவர்களது சிப்ஸை சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் 'கருவாட்டின்' அருமை தெரியும்.

வரும் ஞாயிறு (31.08.2014) 'தினகரன்' நாளிதழுடன் வெளியாகும் 'தினகரன் வசந்தம்' இணைப்பிதழில் இந்த தம்பதியினரின் பயணத்தை இரு பக்கங்களில் வாசிக்கத் தவறாதீர்கள்
                                                            கே. என். சிவராமன்

No comments: