Monday, August 25, 2014

முகநூல் புலம்பல்

 
 
முகநூல் புலம்பல் -1

முன்பெல்லாம்
தனியாய் சிரித்தால்
பைத்தியமென்பர்.
இப்பொழுதோ
கணினி முன்னமர்ந்து
பதிவுகள் பார்த்து
தனியே சிரிக்கிறேன்,
நானோர் முகநூல் வாசி
---------------------------------
முகநூல் புலம்பல் - 2

அருகில் இருப்போரை
அன்னியமாக்கிடும்
அறியாதவர்களை எல்லாம்
நண்பர்களாக்கிடும்
மாய வலை.-----------------------------
முகநூல் புலம்பல் -3

அருகில் இருப்பவர்
பேசும் பேச்சுக்கு
பதில் சொல்லமாட்டோம்
எங்கோ இருந்து
யாரோ ஒருவர் இடும்
நிலைத்தகவலுக்கு
பதிலடிப்போம்.
--------------------------
முகநூல் புலம்பல் - 4

உறங்கப்போகுமுன்
கடைசிப் பார்வையும்
விழித்தெழுந்தபின்
முதல் பார்வையும்
முகநூலென்றால்
அதுவே இதனின் பித்து நிலை
------------------------------------
முகநூல் புலம்பல்- 5

"லைக்" காத்தவர்கள் எல்லாம்
பதிவை படிக்காதவரல்லர்
"லைக்" கியவரெல்லாம்
பதிவை முழுதாய் படித்தவர்களுமல்லர் .
------------------------------------
முகநூல் புலம்பல் - 6

ஒரு நிலைத் தகவல்
பல புதிய
நிலைத் தகவல்களை
உருவாக்கும்.
--------------------------------
முகநூல் புலம்பல்- 7

விவாதம் நடக்கும்
ஆனால்
தீர்வே கிடைக்காது.

தொடரும்..,
 

No comments: