Thursday, August 14, 2014

சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்

 சுதந்திர தின வாழ்த்துகள் 

இந்திய நாட்டின் சுதந்திரம்
இந்திய மக்கள் அனைவருக்கும்
இந்திய மக்கள் வெளிநாட்டில் இருந்தாலும்
இந்திய மக்கள் உள்நாட்டில் இருந்தாலும்
இந்திய குடியுரிமை பெற்றோர் அனைவரும் கொண்டாடுவோம்
சிலர் சொல்வதுபோல்
சிலர் பிரிவு படுத்துவதுபோல்
சிலர் இந்தியா சிலருக்கு சொந்தம் என்று சொல்வதுபோல்
சிலர் இந்திய குடியுரிமைக்கு புதிய விளக்கம் கொடுப்பதுபோல் அல்லாமல்
நாம் மொழி ,இனம் .மதம் .மார்க்கம் என்ற பிரிவில் பிரிந்து நிற்காமல்
நாம் பிரிந்து நிற்காமல் கொண்டாடுவோம்
நாம் ஏழையாக இருந்தாலும் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவோம்
இந்தியா சுதந்திரம் பெற்றது அனைத்து மக்களின் அயராத சுதந்திர வேட்கையால் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்
சுதந்திரம் பெற்றதால் நன்மை கிடைத்ததா அல்லது ஒரு சிலருக்கு மட்டும் நன்மை பெற்றார்களா என்ற மன பேதம் கொள்ளாமல்
சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
சுதந்திரமாக குழந்தைப் பெற இந்நாட்டில் உரிமை உண்டு
என்பதை மனதில் நிறுத்தி சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
வாழ்க பாரதம் ,வாழ்க இந்தியா

( ஹிந்தியா ! ?அல்லது ஹிந்துத்துவா ! ? ஆய்வு வேண்டாம் )
--------------------------------
காதலன் காதலியிடம் கேட்பது சுதந்திரம்
கணவன் மனைவியிடம் கேட்பதும் சுதந்திரம்
மாணவன் ஆசிரியருடன் கேட்பதும் சுதந்திரம்
சுதந்திரத்தில் எத்தனை வகை!
--------------------------------------------

கடமை உணர்வில்லாத உரிமையோ உரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
--------------------
மஹாத்மா காந்தி அன்பு வழியில், அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை
” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:

No comments: