Tuesday, September 30, 2014

உணர்த்திச் சென்ற உண்மைகள் உயர்வானவை

தனிமையில் வீணாகிய இரவு
அதிர்ச்சி தரும் படுக்கைகள்
பார்த்திராத தலையனைகள்
உடைந்த நெஞ்சோடு உருண்டு படுத்தும்
புரண்டு படுத்தும் உறக்கமில்லை
அதிர்ச்சி தரும் கனவுகள்
மையை ஊற்றிய காரிருளில்
மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சங்கள் போல்
மனதில் நிகழ்ந்த நிகழ்வுகள்
மின்னைல்களாய் வந்து மறைகின்ன்றன
சரியான செய்திகள் சொல்லாத இருட்டடிப்பு
பத்திரிக்கைகள் இருந்தும் பார்க்க மனமில்லை
பத்திரிக்கைகள் பார்த்தும் பழக்கமில்லை

பெற்ற வசதியும்
செய்த விளம்பரமும்
கானல் நீராய் மறைந்து போயின

நம்பிகையை இன்னும் நேசிக்கின்றேன்
விடிந்தால் வெளிச்சம் வந்தடையுமென்று

திருத்த முடியும்
திருந்திக் கொள்ள முடியும்
பெற்ற வாழ்க்கைப் பாடங்கள் தந்த படிப்பினைகள்
உணர்த்திச் சென்ற உண்மைகள் உயர்வானவை

No comments: