Monday, September 15, 2014

அரசு வேலையும் தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் வேலையும்

அரசு வேலை பார்த்தவருக்கு ஓய்வு ஊதியம் உண்டு
அரசு வேலை பார்ப்பவரில் சிலர் சம்பளத்துடன் கிம்பளமும் பெற்று சேர்த்து விடுகின்றனர்
வாங்கிய வருமானத்தில் சேர்த்த பணத்தை வட்டிக்கும் விடுகின்றனர்
அரசு வேலை நிலையான வேலை

தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் வேலை நிரந்தரமில்லை
தொழில் செய்தவன் வருமான வரியை கட்டினான்
தொழிலில் நஷ்டம் வந்து கடையை மூடினான்
வயதானதால் வீட்டில்

அறுவடை செய்ய நிலமும் இல்லை,வாய்க்காலில் தண்ணியும் வருவதில்லை ,நிலத்தடி நீரும் வத்திப் போச்சு
கூலி வேலை செய்ய உடலில் குருதியும் குறைஞ்சுப்போச்சு

அரசு வாங்கிய வருமான வரியை கொடுத்து உதவுவதில்லை
அரை காசு வருமானம் வந்தாலும் அரசாங்க வேலையே உயர்வென்று
அன்று சொன்னது இன்றும் எக்காலமும் பொருத்தமாக உள்ளது

No comments: