Wednesday, November 12, 2014

மனமே….! பார்வைகள்….!

மனமே….!

அடிக்காமல் அழவைக்கிறாய்
என்னை
ஆட்டிப் படைக்கிறாய்
தினமும்
அடங்காமல் மிரட்டியே
என்னை
ஆட விடுகிறாய்

நினைவுகளைத் தந்துவிட்டு
அவைகளை
மறக்க மறுக்கிறாய்
நீ போகும் பாதையில்
என்னையும்
இழுத்தே செல்கிறாய்

எல்லையே இல்லாத
உனது
இலக்கு எட்டுமோ
எனது
மனக் கணக்கில்.
 பார்வைகள்….!

என் பார்வை
பரந்து விரிந்தது.

எட்டி நின்று பார்க்கிறேன்
கண்ணுக்கு எட்டியதெல்லாம்
எட்டாக் கனிகளே!
எனினும் விட்டுவிடவில்லை
முயற்சி செய்கிறேன்….
என்றாவது ஒருநாள்
திருவினை ஆகுமென்ற
நம்பிக்கையில்.

கிட்ட நின்றும் பார்கிறேன்
கிட்டடியில் எட்டியது
சுவை குறைவாகவே
இருப்பதாய் எண்ணுகிறேன்!
கண்டதை கொண்டதும்
ஆசை அதிகரித்து
காணாததை வேண்டியே
அலைபாயுது மனம்.

மேலும்,
என் பார்வை
பரந்து விரிந்தது.

No comments: