Wednesday, December 17, 2014

கவிதை எழுத... பரப்பரப்பவரா நீங்கள்?- தாஜ் தீன்

கவிதை எழுத...
பரப்பரப்பவரா நீங்கள்?
பேனாவை மூடிவைத்துவிட்டு
நல்ல கவிதைத் தொகுப்புகளில்
முழுகி முத்து எடுங்கள்!

முழுகும் ஆழம்
உங்களுக்கு சிரமமும் தரலாம்.
அந்த சிரமம்தான்
நீங்கள் எழுதப் போகும்
நாளைய கவிதைகளின்
அஸ்த்திவாரம்!

'வைரமுத்துவை வாசித்திருக்கிறேனே!'
'கவிக்கோவை வாசித்திருக்கிறேனே!!'
என்பதெல்லாம் போதாது.
போதவே போதாது.

குளத்தில் முழுகியெழுவதற்கும்
கடலில் முழுகி எழுவதற்கும்
நிறம்ப வித்தியாசம் உண்டு.

இன்றைய
தமிழ்க் கவிதையின்
நீள, அகலம் + ஆழமும்
ஏகத்துக்கும் அபரிமிதமானது.
உலக கவிதைகளோடு
போட்டிப் போடக் கூடியது.

தீர்க்கமான கவிஞர்களின்
கவிதைத் தொகுப்புகள் எனும்
கடலில் முழுகி
முத்தெடுங்கள்!

பின்னர்...
கவிதை தானே கைகூடி
உங்களை பின் தொடரும்!
நீங்கள் எழுதும் வரிகளெல்லாமும் கூட
கவிதையாய் பரிணமிக்கும்!
 

No comments: