Monday, March 30, 2015

உலகம் உன் கையிலடா....! (தொடர் - 3)


உலகம் உன் கையிலடா....!
மானுடத்தை மறந்துவிட்ட உலகமடா!
=== மாக்களால் ஆளப்படும் உலகமடா!
மன்னுயிர் காக்க முனைந்துவிட்டால்
=== மனுநீதி காத்திடும் உலகமடா!!

பொதுநலம் புதைத்துவிட்ட உலகமடா!
=== புண்ணியம் புறக்கணித்த உலகமடா!
மனிதநேயம் மாண்பாய் காத்திருந்தால்
=== வாழ்வாங்கு வாழவைக்கும் உலகமடா!!
உழாமல் உண்ணஎண்ணும் உலகமடா!
=== உழவர்கள் மாண்டுபோகும் உலகமடா!
உழுதுண்டு வாழ்வோராய் மார்விட்டால்
=== தொழுதுண்டு வாழவைக்கும் உலகமடா!!
(தொடர் - 3)

 ஆக்கம் ராஜா வாவுபிள்ளை அவர்கள் 

 உலகம் உன் கையிலடா....!(தொடர் - 2)-ராஜா வாவுபிள்ளை
 உலகம் உன் கையிலடா....! - ராஜா வாவுபிள்ளை (தொடர் - 1)
 

No comments: