Friday, August 28, 2015

உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?.

உயிரும் ,மூச்சும் பறக்கும் தூசு
பிறப்பு,
வளர்ப்பு,
இருப்பு உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?.
இறப்பு
எல்லாம்
அடையாளம் காணமுடியாத தடங்கள் கூட !

துயரங்களோடு நல்ல பரிச்சயம்
இது நிரந்தரமற்ற மனிதப் பிறப்பு என்பதால்

எந்த நிலத்தை பிடிப்பது
எப்படி பணம் சேர்ப்பது
யாரோடு போட்டி போடுவது
பொறாமைப் படுவது
குழி யாருக்கு தோண்டுவது
இவை எல்லாம் மனித ஆத்மாக்களின் ஆசைகள்

யார் பெற்ற பிள்ளை பொறுமையானவர்
நல்லவர்
அமைதியானவர்
ஏமாற்றாதவர்
தீங்கு செய்யாதவர்
தவறு செய்யாதவர்
அன்பானவர்
பிறரை மதிப்பவர்
உதவி செய்பவர்
இத்தியாதி இத்தியாதி
படைத்தவனுக்குத் தெரியும்.!

முக நூலில் வம்பை ஏற்படுத்துவதற்காய்
தினந்தோறும்
நெட் கபே காரரிடம்
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டால் .

அய்யாமுல் ஜாஹிலியா காலத்தை
அப்படியே கடைபிடித்திருக்கின்றான்

பிர்அவூன் வரலாற்றை படித்திருக்கின்றான்
பெண்கள் மீதுஅட்டகாசம் நடத்துகிறான்.

அப்பாவி மக்களுக்கு
தொல்லை கொடுக்கிறான்.

யார் மனசு துடிக்கின்றது
அலசிப் பார்க்கவும் தெரிகிறது.!

மழைத் துளி அவன் மீது பட்டுத் தெரித்தது
அழுக்கு அகற்றிய படி தேய்த்துக் குளிக்கிறான்.

அவனுக்கு யார்மீதும் பரிதாபம் இல்லை
அன்பு இல்லை
பாசம் இல்லை
பற்று இல்லை.

உணர்வுகளை புதைக்க
உள்ளத்தை-
தோண்ட மட்டும் தெரிந்திருக்கிறது
.

பிறப்பு
ஓர் வரமென்று
எப்படிச் சொல்ல முடியும் ?

மரணம்
ஓர் விதி என்று
யாரால் சொல்ல முடியும்??

Kalaimahel Hidaya Risvi

No comments: