Tuesday, September 29, 2015

அடங்காத ஆசைகள் ....!


அடங்காத ஆசைகள்
ஆர்ப்பரித்து அலைக்கழிக்கும்
முடங்காத வேலைகள்
முழுமைபெற்று முன்னேற்றும்

தடங்காத பயணங்கள்
முன்சென்று இடம் சேர்க்கும்
விரும்பாத விசயங்கள்
காலவிரயத்தை வரவேற்கும்

விளங்காத கருத்து
விவாதத்தில் வலுவிழக்கும்
உழைக்காத கரங்கள்
வெறும் அலங்காரம் ஆகும்

கல்லாத இளமை
காலத்தால் வீண்விரயம் ஆகும்
பயிற்சிக்காத கலைகள்
பயனற்றுப் போகும்

மெல்லாத உணவு
உடலில் நஞ்சை சேர்க்கும்
பற்றில்லாத உறவு
பாதை மாறியேப் போகும்
ராஜா வாவுபிள்ளை

No comments: