Sunday, September 13, 2015

கருவறை பயணம்

தனிமை..ஆனாலும்

அந்த இருட்டு சுகமாயிருந்தது..

வெளிச்சம் பார்த்ததும் அழுகை வந்தது..

தாய் எடுத்து முத்தம் தந்தார்.

தந்தை அணைத்து ஆறுதல் சொன்னார்..

சொந்தங்கள் சிரித்துக் கொண்டார்கள்...

வளர்ந்ததும் அன்பு புரிந்தது..
பாசம் தெரிந்தது..

நண்பர்கள் வந்தார்கள்..நட்பு புரிந்தது..நலமும் வந்தது..

தந்தை மறைந்தார்.
தாயும் மறைந்தார்.

மறுபடி தனிமை வந்தது..

உணர்வற்ற தனிமையாய் இருந்தது.

திருமணம் நடந்தது..மனைவி வந்தார்.மகிழ்வு வந்தது..

இல்லறம் இனித்தது..

குழந்தைகள் வந்தது..

குதூகலம் இருந்தது..

வேலை வந்தது..

வெளி நாட்டு பயணம் வந்தது..

மீண்டும் தனிமை வந்தது..

ஒன்று மட்டும் புரிந்தது..

தனிமையாகத் தான் இறுதி பயணமும் இருக்கும்..

அதற்கான சின்ன ஒத்திகை இந்த தனிமை என்று புரிந்தது.
உள்ளம் மகிழ்ந்தது..

இந்த தனிமை ஒன்றும் பாரமில்லை..இப்போது எந்த பயமுமில்லை..

இது ஒரு கருவறை தனிமை..

ஒரு வித்தியாசம் ..

அது தாயின் கருவறை..
உணர்வோடு சேர்ந்து
உயிரும் இருந்தது..

இது தனிமை கருவறை..
உயிர் இருப்பதால்
உணர்வும் இருக்குது..
 Saif Saif

 
Saif Saif

No comments: