Saturday, September 26, 2015

பின்னணி முக்கியம் அமைச்சரே!






காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த எலி சொன்னது: "சகோதரா, ஏன் இவ்வாறு புகை பிடித்து வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..."

புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது..

சிறிது தூரத்தில் ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டிருந்தது.

எலி கேட்டது: " சகோதரா, ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் போட்டு வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..."

யானை ஹான்ஸை தூக்கி எறிந்து விட்டு எலியுடன் சென்றது...

சற்று தூரம் சென்றபோது சிங்கம் சாராயம் குடித்துக் கொண்டிருந்தது..

சிங்கம் சொன்னது: "சிங்க மகாராஜா, குடி குடியைக் கெடுக்கும். ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... வாருங்கள் என்னுடன். இந்த காடு எத்தனை அழகு என்பதை காட்டுகிறேன்..."

சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. எலி தூரப் போய் விழுந்தது.

புலியும் யானையும் அதிர்ச்சியில் உறைந்தன. சிங்கத்திடம் கேட்டன: "மகாராஜா, இந்த நல்லெண்ண தூதனை ஏன் அடித்தீர்கள்...?"

சிங்கம் சொன்னது: "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

நன்றி:  Pushpa Raj


நன்றி தகவல் தந்த  Kathir Vel அவர்களுக்கு 

No comments: