Wednesday, November 11, 2015

மண் ….!

மண் ….!

குறைகள் குறைவில்லாமல் இருப்பதும்
மண்ணில் தான்
நிறைகள் நிறைந்து இருப்பதும்
மண்ணில் தான்

மனிதம் பிறந்ததும்
மண்ணில் தான்
மானுடம் தழைப்பதும்
மண்ணில் தான்

மனுநீதி பிழைப்பதும்
மண்ணில் தான்
மந்திரங்கள் ஜெபிப்பதும்
மண்ணில் தான்

மாயங்கள் நடப்பதும்
மண்ணில் தான்
விண்ணைத் தொட துள்ளுவதும்
மண்ணில் தான்

மண்ணை கொள்ளையடிப்பதும்
மண்ணில் தான்
மானங்கெட்டு திரிவதும்
மண்ணில் தான்

வாழ்வாங்கு வாழ்வதும்
மண்ணில் தான்
குட்டிச் சுவாராகிப் போவதும்
மண்ணில் தான்

ஆடி அடங்குவதும்
மண்ணில் தான்
மண்ணை அறிந்து கொண்டால்
விண்ணையும் அடையலாம் விசுவாசியாய்!
 
ராஜா வாவுபிள்ளை

No comments: