Wednesday, November 25, 2015

தீவிரவாதம்

இந்துக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் இந்தியா என்றோ அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் யூதம் என்றோ தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் உலகம் என்றோ முடிந்துபோயிருக்கும்

தீவிரவாதம் லாபநோக்குடைய வியாபாரம்
வல்லரசுகள் நல்ல வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச் சந்தைக்குக் கொண்டுவராவிட்டால் வல்லரசுகளின் பிழைப்பு நாறிப்போகும்

தீவிரவாதத்தை வல்லரசுகள் விரும்புவதைப் போல உலக மக்கள் யாவரும் விரும்பிவிட்டால் ஜீவராசிகளே மண்ணில் இல்லாதொழியும்

தீவிரவாதம் வெறுக்கும் மக்களைப் போற்றுவோம்
தீவிரவாதம் உருவாக்கும் அரசுகளைத் தூற்றுவோம்

 * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
http://anbudanbuhari.blogspot.in

No comments: