Wednesday, November 25, 2015

நுணலும் தன் வாயால் கெடும்

கிணற்றுத் தவளைகளின்
ஞான முதிர்ச்சி கண்டு...

பிரமித்து போன
கடல் தவளைகள்

இப்போது.......

கையது கொண்டு
வாயது பொத்தி

காலது கொண்டு
உடலது கிடத்தி

கண்ணது மூடி
சிரமது தாழ்த்தி

அடி தொழுதெழும்
ஆரம்ப சீடர்களாகி

பணி விடை
செய்திடும் காட்சி

என்னென்பேன்
வெறும்
இகழ்வென்பேன்

Vavar F Habibullah

No comments: