Thursday, December 3, 2015

கனத்த மழையிலும் இணைத்த மனித நேயம்...

கனத்த மழையிலும்
இணைத்த மனித நேயம்...

அரசியல்வாதிகளின்
சாயத்தைக் குலைத்து;
அரசியலுக்கான முன்னெடுப்புகளின்
முகரையை உடைத்து;
மகத்தான மனிதர்களை வெளிப்படுத்தினாய்;

சாதி மத அரசியலில் முடக்கியிருக்கும்
அரசியல்வாதிகளை அம்மணமாக்கி;
மக்களின் முன் வெளிச்சம்காட்டி;
மரிக்காத மனிதநேய
மகான்கள் யாரென தெளிவுப்படுத்தினாய்;

எவ்வித உறவுமில்லாத
துயரப்படும் பொதுசன மக்களுக்காக
எங்கள் விழி நீரைக்கொண்டுவந்து
நாங்கள் யாரென்றே...
எங்களுக்கு அறிமுகப்படுத்தினாய்;

தமிழன் யாரென்று காட்டினாய்;
தமிழனுக்கு...
மற்றவர்கள் யாரென்று காட்டினாய்;
இந்து முஸ்லிம் கிருத்துவ மக்களின்
மனிதாபிமானத்தைக் காட்டினாய்;
எங்கோ அழும் ஒலத்திற்கு
கடல்கடந்திருக்கும் எங்களின்
கண்களுக்கு கண்ணீரைக் காட்டினாய்;
 -யாசர் அரபாத்
என் பக்கம் added 19 new photos.
 
 

No comments: