Saturday, December 12, 2015

அன்பேவழி....!

பூமியினில் புனிதமாய்
ஆதிமுதல் வாழ்வதற்கும்
அந்தமாய் வானுலகம்
சேர்வதற்கும் அன்பேவழி

பால்புகட்டும் தாயிக்கும்
பசியுணரும் சேயிக்கும்
காதல்செய்யும் தம்பதியர்க்கும்
உலகில்வாழ அன்பேவழி

காசுபணம் கேட்க்காது
பிரதிபலன் பார்க்காது
அடைக்கும் தாளில்லாது
கொடுதுப்பெற அன்பேவழி

அளவில்லாது அருளுவது
அளந்துவிட்டால் குறைந்துவிடும்
கொடுக்கக்கொடுக்க கூடுவது
சென்றுசேர அன்பேவழி

மடைதிறந்த வெள்ளம்போல்
வற்றாத நதியைப்போல
இறையனும் கடல்சேர
மானுடர்க்கு அன்பேவழி

 ராஜா வாவுபிள்ளை

No comments: