Wednesday, February 3, 2016

தேவையின் நாயகி….!

செல்லும் இடமெல்லாம்
காண்கிறேன்
ஆட்கொள்ள விளைகிறேன்
ஆர்வத்துடனே
கண்ணிலே காட்சிகள்
காட்டுகிறாய்
நிற்காமல் உருண்டு
ஓடுகிறாய்
கையில் கிடைத்துவிட்டால்
ஆட்டுவிக்கிறாய்

கிடைக்காவிட்டால் யாவரும்
ஆடிப்போகின்றனர்
யோசனைகள் செய்விக்கிறாய்
வரும்முன்னே
வந்ததும் மறக்கடிக்கிறாய்
எல்லாரையுமே
தேவையின் நாயகியே
பணமே
நீயின்றி யாவரும்
முடமே !

ராஜா வாவுபிள்ளை

No comments: