Monday, February 8, 2016

அன்புடை நெஞ்சம்..!

எனக்கு டீ பிடிக்கும்;
உனக்கு காஃபிதான் பிடிக்கும்.

எனக்கு வெள்ளையும் பச்சையும் பிடிக்கும்;
உனக்கு ஊதாவும் சிவப்பும்.

எனக்கு இனிப்பு பிடிக்கும்;
உனக்கு உவர்ப்பும் புளிப்பும்.

நான் கால்களைப் போர்த்திக்கொண்டு உறங்குவேன்;
நீ கால்களை மட்டும் போர்த்த மாட்டாய்.

எனக்குப் பிடித்த ஆடைகளை உன்னுடன் இருக்கும்போது
நான் அணிவதில்லை;
ஏனெனில் அவை உனக்குப் பிடிக்காது.

எனக்குப் பிடிக்காத ஆடைகளை நீ அணிவதில்லை,
நான் ஊரிலிருக்கும் சமயங்களில்.


‪#‎யாயும்‬ ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே 
.-குறுந்தொகை 40
#‎நிஷாமன்சூர்‬

நிஷா மன்சூர்

No comments: