Wednesday, April 20, 2016

மறந்தான் மனிதன் ....

- அப்துல் கபூர்
மறந்தான் மனிதன் ....
தாயோடு உரைடினான்
கிட்டிய பாசத்தை
உணர்ந்திட மறந்தான் ...
மழலையோடு கொஞ்சினான்
தித்திக்கும் மொழிதனை
ரசித்திட மறந்தான் ...
சோலைக்குள் நுழைந்தான்
இதமான தென்றலை
சுவாசிக்க மறந்தான் ....

மலர்களை முகர்ந்தான்
கொட்டிய வாசத்தை
நுகர்ந்திட மறந்தான் ....
பள்ளிக்கூடம் சென்றான்
கல்விதனை கற்று
தேர்ச்சியுற மறந்தான் ....
வியாபாரம் செய்தான்
இஸ்லாம் இயம்பிய
நேர்மையை மறந்தான் ....
மரணத்தை முத்தமிட்டான்
சுவர்க்கத்தை திறந்திடும்
தொழுகையை மறந்தான் ....
இறைவனே அருளாளனே
மறுமையில் நிகழ்ந்திடும்
விசாரணைக்கு பதிலுரைக்க
மறவாத நிலைதனை
யாவருக்கும் தந்திடு ...


Abdul Gafoor அப்துல் கபூர்

No comments: