Tuesday, May 24, 2016

சிந்தனைக்கு வெளிச்சமிடுகிறேன் ...


படத்தை கண்டதும்
கற்பனை கோர்த்த
வார்த்தைகளை வரிகளாக்குகிறேன் ...
Abdul Gafoor

சோகமான சூழலில்
கடலின் ஓரம்
அமர்ந்திருக்கும் சிறுமியின்
ரணமான நெஞ்சினில்
வறுமையின் ஈரம் ....

கையினில் துரும்பெடுத்து
மணலை தோண்டுது
வெறுமையான மனசோ
அணலை தீண்டுது ....
அருகினில் எரியும்
ஒளியின் நிழலில்
வாழ்வை சோதனையாக்கும்
கற்களை உடைத்திட
உளியினை தேடுது ....
தவிக்கும் மழலை
வாழ்க்கையில் போராடுது
உள்ளத்து சாலைகளில்
உலவிடும் எண்ணங்கள்
சோகத்தில் நீராடுது ....
வாழ்க்கையின் பொழுதுகள்
விரக்தியோடு கழிகிறது
நம்பிக்கையின் விழுதுகள்
உதிராது நிலைக்கிறது .
..
Abdul Gafoor அப்துல் கபூர் 
..---------------------
படம் உதவி
காதல் கவிதையின்
முடிசூடா மன்னன்
Sadhiq Prince
சிங்கப்பூர் ....

No comments: