Sunday, June 5, 2016

ரமளானே வருக ....

ரமளானே வருக ....

Abdul Gafoor 

வானகத்து இல்லங்களில்
பிறை வடித்திடவும்
மனித உள்ளங்களை
புனிதக் கூண்டுகளில்
சிறை பிடித்திடவும்
ரமளானே வருக ....
சுவர்க்கத்தை காட்டிடவும்
நரகத்தை பூட்டிடவும்
தீமைகளை போக்கிடவும்
சுமக்கும் பாவங்களின்
சுமைகளை நீக்கிடவும்
ரமளானே வருக ...
இறை அச்சத்துடன்
நேர்த்தியான முப்பதில்
நோன்புகளை நோற்கவும்
திட்டமிடும் சைத்தானின்
சூழ்ச்சிகள் தோற்கவும்
ரமளானே வருக ...

தூக்கத்தை மறந்திடவும்
சஹருக்கு எழுந்திடவும்
சுத்தமான சிந்தனைகளோடு
ஐவேளை தொழுதிடவும்
அசுத்தமான எண்ணங்கள்
உதிர்ந்து விழுந்திடவும்
ரமளானே வருக ...
இறை மறைதனை
நிறைவாய் ஓதிடவும்
இனிய மாண்புள்ள
ரமளானே வருக
கனிய வைக்கும்
நற்செயல்கள் பெருக ..
..
Abdul Gafoor 
அப்துல் கபூர்
05.06.2016 ...

No comments: