Thursday, September 1, 2016

யார் சொன்னாரோ.....! யார் சொல்வாரோ.....?

பொழுது புலர்ந்ததும்
இரைதேடி பறந்துசெல்ல
பறவைகளிடம் யார் சொன்னாரோ.....!
பாறை இடுக்கிலும்
வேர்விட்டு முளைக்க
மரங்களிடம் யார் சொன்னாரோ.....!
செடியில் மலர்ந்து
மனிதமனதை மகிழ்விக்க
பூக்களிடம் யார் சொன்னாரோ.....!

மலையில் உருவாகி
கடலில் கலந்துவிட
நதிகளிடம் யார் சொன்னாரோ.....!
கிழக்கே எழுந்து
மேற்கே அஸ்தமிக்க
ஆதவனிடம் யார் சொன்னாரோ.....!
இரவில் உதித்து
உலகை ஒளிர்விக்க
நிலவிடம் யார் சொன்னாரோ.....!
பிறந்ததும் தாயின்
மார்பைதேடி பாலருந்த
சிசுக்களிடம் யார் சொன்னாரோ.....!
ஒன்றாய் கூடி
ஒற்றுமையாய் வாழ்ந்திட
விலங்குகளிடம் யார் சொன்னாரோ.....!
தன்னம்பிக்கை இழக்காது
தொடர்ந்து உழைக்க
மனிதனிடம் யார் சொல்வாரோ.....?
சகமனிதனை மதித்து
சமமாய் பாவிக்க
மனிதனிடம் யார் சொல்வாரோ.....?

ராஜா வாவுபிள்ளை

No comments: