Tuesday, September 13, 2016

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்



பெற்ற பிள்ளையையே
 தியாகம் செய்ய முற்படுகிறார் பக்தர்
 மகனும் தலைசாய்க்கிறான்
 கூர் வாளோ வெட்ட மறுக்கிறது
 சாத்தானும்  தடுக்கிறான்
 பலியிடத்தான் வேண்டுமெனில்
 அதற்கு ஓர் ஆடு போதுமென்று
 இறைக்கட்டளை வந்ததாக
 காட்சி மாறுகிறது கருணை நிறைகிறது
 நரபலி மறுத்து மனிதத்தைக் காத்தத்
 திருநாள்தான் ஹஜ் பெருநாள்
 தனக்குள் இருக்கும்
 தீயவற்றைப் பலியிடுதலே
 இறைக்கான பலியென்றானது

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
https://anbudanbuhari.blogspot.in

No comments: