Sunday, September 18, 2016

புதியவழிகள் பிறக்கக் கண்டேன் ....!


பலமுறை முயன்றேன்
ஒருமுறையே வெற்றிவந்தது
பாடமாய் தக்கவைத்துக் கொண்டேன்.

ஒருவழி கண்டேன்
நல்வழி என்றானது
அவ்வழி நடந்தேன் என்றுமே.

வெற்றியும் தோல்வியும்
மாறிமாறியே வந்தன
பட்டறிவைப் பெற்றுத் தந்தன.

உண்ணாமல் உறங்காமல்
தேடலை தொடர்ந்தேன்
புதியவழிகள் பிறக்கக் கண்டேன்.

 
ராஜா வாவுபிள்ளை

No comments: