Saturday, September 10, 2016

கேட்டேன். ...!


வற்றாத மதியை
கேட்டேன்
வறுமையற்ற வாழ்வை
கேட்டேன்
செருக்கற்ற சிரசைக்
கேட்டேன் ்
தெளிந்த மனத்தைக்
கேட்டேன்
நேர்கொண்ட பார்வை
கேட்டேன்

சீரான செல்வம்
கேட்டேன்
செல்வத்தோடு ஈகைகுணமும்
கேட்டேன்
நல்மனையும் மக்களையும்
கேட்டேன்
நோயற்ற வாழ்வை
கேட்டேன்
நீண்ட ஆயுளை
கேட்டேன்

யாரையுமே கேட்காது
என்னைப் படைத்த
இறைவனிடம் கேட்டேன் ....!

ராஜா வாவுபிள்ளை
 

No comments: