Tuesday, September 27, 2016

பிறவிப் பயன் ....!

தோண்டத் தோண்ட மண்ணு பூமியில்
தொடர்ந்து தோண்ட சகதியும் வரலாம்
பொறுமையும் சேர்ந்தால் பொன்னும் வரலாம்
வியர்வையில் வளரும் தேடல்
துருவத் துருவ எண்ணம் மனதில்
தொடர்ந்து துருவ தெளிவு வரலாம்

எழுச்சியும் சேர்ந்தால் கவிதையும் வரலாம்
தேடலின் தொடர்தலில் நிறைவு
கொட்டக் கொட்ட விழிப்பு கண்ணில்
தொடர்ந்து நோக்க வழிகள் தெரியலாம்
பயிற்சியும் சேர்ந்தால் இலக்கை அடையலாம்
இயற்கையின் போக்கில் இன்பம்
நடக்க நடக்க பழகும் பாதை
தொடர்ந்து நடக்க தடைகள் நீங்கலாம்
முயற்சியும் சேர்ந்தால் முன்னேற்றம் காணலாம்
சோம்பலை ஒதுக்கிய விடுதலை
உதவ உதவ பெருகும் நன்மை
தொடர்ந்து உதவ மனிதநேயம் நிலைக்கும்
கருணையும் சேர்ந்தால் இறையருளும் கிடைக்கும்
பிறவிப் பயன் முன்னிற்கும்

ராஜா வாவுபிள்ளை

No comments: