Friday, November 4, 2016

தேவதையவள் ....!

இல்லத்தேரினில் அனுதினம்தவறாதே
வலம்வரும் தேவதையவள்
=* கனிந்தேமனம் நெகிழ்ந்தேநிதம்
தருமமுதம் திகட்டாதே
அழகேயுருவாகி ஆனந்ததிருவாகி
ஆட்கொள்ளும் தேவதையவள்
=* காதல்களிப்பூட்டி கூடிஉறவாடி
தேனமுதம் தருவாளே
முகில்கார்குழல் பின்நீண்டுதவழ
என்முன்னிற்கும் தேவதையவள்

=* மனமுவந்து எனக்கேயென
முக்கனியும் படைப்பாளே
சிறுகேசமதை மதிவதனமதில்
விளையாடவிடும் தேவதையவள்
=* கதைப்பேசும் கண்களிரண்டில்
பரிபாஷை சொல்வாளே
பொன்மான் இளைப்பாறும்
தேகம்கொண்டிருக்கும் தேவதையவள்
=* கனிவாய்இதழ் தேன்மதுரம்
என்னில்சிந்திட வருவாளே

ராஜா வாவுபிள்ளை

No comments: