Tuesday, December 13, 2016

பிறவிப் பயனை அடைவேன்....!


விழித்தே இருந்தேன்
உயிர்ப்பெறும் கனவுகள்
கண்டிருந்தேன்

உழைத்தே இருந்தேன்
வியர்வையின் வலியை
அறிந்தேன்

நடந்துகொண்டே இருந்தேன்
நல்வழிகள் பலவும்
கண்டேன்


படித்துக்கொண்டே இருந்தேன்
புதுப்புது அர்த்தங்கள்
புரியக்கண்டேன்

பயணங்களைத் தொடர்ந்தேன்
புதுப்புது உலகங்களைக்
கண்டேன்

அறிவொளி நாடினேன்
இருள் தூரவிலகக்
கண்டேன்

புதியன விரும்பினேன்
பழமையின் மகத்துவம்
அறிந்துகொண்டேன்

நட்புகளை பாராட்டினேன்
நாலும் தெரிந்து
கொண்டேன்

செல்வங்கள் சேர்த்தேன்
ஈகையில் இருக்கும் இன்பம்
கண்டேன்

இறைவழி உணர்ந்தேன்
அதன்படி நடப்பேன்
பிறவிப் பயனை அடைவேன்

ராஜா வாவுபிள்ளை

No comments: