Friday, December 30, 2016

இன்புடன் வாழலாம் !

 ( எம். ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
 நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
          கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்
          பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
          இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

          பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
          அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்
          தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்
          வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !


          போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
          வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே
          மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
          காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

            இறைவனை எண்ணினால்
            இன்புடன் வாழலாம்
            குறையெலாம் அகன்றுநீ
             நிறைவுடன் வாழலாம்
            கறையுடை மனத்தினை
             காணாமல் செய்திடில்
             உலகினில் உன்னதம்
             உன்னுளே உதித்திடும் !
       

No comments: