Wednesday, January 4, 2017

துரை முருகன் அழுததைப் பார்த்து பொதுக்குழுவே ../ Abu Haashima


துரை முருகன் அழுததைப் பார்த்து பொதுக்குழுவே
கண்கலங்கிப் போச்சு.
பார்த்திட்டிருந்த எனக்கும்
லேசா கண்கலங்க ...
இதல்லவா பாசம்...!

கழகத்தவர்களை
உடன்பிறப்பே என்று அழைத்து
பேச்சை ஆரம்பிக்கும் அந்தத்
தமிழ் கிழவன்
ஊட்டி வளர்த்த பாசத்தையும் உரிமையையும் எண்ணி வியந்து போனேன்.
அன்று ...
" தம்பி தலைமை தாங்க வா " என்று
நாவலர் நெடுஞ்செழியனை ஒரு மேடையில்
அண்ணா அழைத்தார்.
இன்று ...
அதனினும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு துரைமுருகன் ...
" தம்பி வா ..
தலைமை தாங்க வா "
என்று ஸ்டாலினை அழைத்து தழுதழுத்தபோது
கலைஞரின் உடன் பிறப்புகள்
உணர்ச்சிக் கொந்தளிப்பில் உருகியதில்
ஆச்சரியமில்லை.
-----------------
ஸ்டாலின் ...
செயல் தலைவர் !
வாழ்த்துக்கள் !

Abu Haashima

No comments: