Sunday, January 1, 2017

வாழ்க்கை வாழ்வதற்கே....!/ ராஜா வாவுபிள்ளை

விதியான வாழ்க்கையை
மதிகொண்டு நடத்திப்பார்
சதினடந்தாலும் தெரியும்
சாதனைகள் பிறக்கும்
சோதனைகள் வரலாம்
வேதனைகள் இருக்கும்
நற்போதனைகள் ஏற்று
நேர்வழி வாழலாம்
உடலில் உயிரிருக்கும்
உறவில் அன்பிருக்கும்
கையில் பணமிருந்தால்
உலகமே தேடிவரும்
அழியாத செல்வமாம்
இறை வணக்கத்தை
கடைபிடித்து இருக்க
எல்லாமே கூடிவரும்

உண்மையை கைப்பிடி
உணர்வு வழிகாட்டும்
துன்பம் துவளும்
இன்பம் பெருகும்
மனிதம் பேணு
புனிதம் தேடிவரும்
மந்திரம் வேண்டியதில்லை
வாழ்க்கை வாழ்வதற்கே!!

ராஜா வாவுபிள்ளை

No comments: