Friday, January 13, 2017

எப்படி சொல்வது..


மாதம் தள்ளிப்போனது;
மனமோ குதுகலித்தது;
புன்னகையாலும் சிரிப்பாலும்
உள்ளம் தத்தளிக்குது;
முதல் முறை இப்படி
வயிறை தடவிப்பார்த்தேன்;
உதட்டை புன்னகையால்
கடித்துக்கொண்டேன்;
ஊர்ஜிதம் செய்யப்பட்ட
ஒர் செய்தியை..
உன்னிடம் சேர்க்க
வெட்கப்பட்டேன்;
முதல் முறை காதல்
சொன்னதைப்போல..
ஆழமாய் மூச்சு வாங்கினேன்;
எப்படி சொல்வது..

அம்மாவாகிட்டேன் என்றா..
அத்தாவாகப் போகிறாய் என்றா..
சிரித்தப்படி கொஞ்சம் அழுதப்படி..
ம்..ம்..ம் எப்படி சொல்வது..
இப்படி சொல்லவேண்டும்
அப்படி சொல்லவேண்டும்..
எல்லாமே தோற்றுப்போனது..
நீ அருகில் வந்ததும்..
கையைப் பிடித்தேன்..
வயிற்றில் ஒத்தினேன்
அழுதப்படி வெட்கப்பட்டேன்..
...#மசக்கை...

Yasar Arafat

No comments: