Wednesday, January 25, 2017

இப்பிரபஞ்த்தில் குழந்தையாய் தரித்தாய்

என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்
இப்பிரபஞ்த்தில்
குழந்தையாய் தரித்தாய்
குமரியாய் நடந்து
இல்லத்தை நிறைத்தாய் நீ
மணமகன் கண்டு
மணப்பெண்ணாகி
மனைவியாய் மாறி
பணிவிடை செய்தாய் நீ
மயக்கம் தலைசுற்றல் குமட்டல்
அனைத்தையும் தனதாக்கிக்கொண்டு
கரு வளரவளர பூரிப்படைந்தாய் நீ
சரிந்து படுத்தால்
கொடி சுற்றுமென்று
நிமிர்ந்தே படுத்து
விட்டத்தைப் பார்த்தாய்

கைவைத்து உயிரோட்டத்தைப்பார்த்த
முதல் மருத்துவச்சி நீ
உருளும் உணர்வை
நீயறிந்து சொல்லிசொல்லி
ஆனந்தம் கண்டாய் நீ
காலம் வந்தது
வெளிவர நேரம் வந்தது
நரம்புகள் ஒடிய
அகிலமே பிளக்கும்
அதிர்வின் ஓசையில்
அழுகையோடு பிறந்த
என்முகம் கண்டு மறுநொடியே
அத்தனையும் மறந்தாய் நீ ....
.
என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.
என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

No comments: