Wednesday, January 25, 2017

என்னோடு நீயும் ....!

என்னோடு நீயும் ....!
என்னோடு நீயும் சேர்ந்திருந்தபோது
கவலைகள் இல்லை
கனவுகள் உண்டு
இலக்குகள் இல்லை
இனிமைகள் உண்டு
என்னோடு நீயும் சேர்ந்திருந்தபோது
இரவுபகல் இல்லை
காலங்கள் உண்டு
கடினங்கள் இல்லை
காரியங்கள் உண்டு

என்னோடு நீயும் சேர்ந்திருந்தபோது
வினைகள் இல்லை
விளையாட்டு உண்டு
வெறுப்பு இல்லை
விருப்பே உண்டு
என்னோடு நீயும் சேர்ந்திருந்தபோது
வருத்தங்கள் இல்லை
வசந்தங்கள் உண்டு
பகைமை இல்லை
நட்புக்களே உண்டு
என்னோடு .....
பால்யமே நீயும் சேர்ந்திருந்தபோது
நான் நானாய் இருந்தேன்
நான் என்னிடத்தில்
இப்போதோ நான் யாராகவோ
எங்கெங்கோ இருந்து செல்கிறேன் !


ராஜா வாவுபிள்ளை

No comments: