Thursday, January 5, 2017

உலகையே வென்றிடுவோம் !

மூத்தோர் சொல்லில்
-----இருக்கும் முழுநெல்லி
முன்னே கசக்கும்
-----பின்னே இனிக்கும்
மரமேறி பறிக்கனும்
-----விழுந்தால் பழுத்துவிடும்
அறிவுரையை கேட்கணும்
-----அதன்படி நடக்கணும்
மூத்தோர் மொழிந்திட்ட
-----பலமொழிகள் யாவும்
பாடுபட்டுப் படித்ததேயாம்
-----பாங்கான பழமொழியாம்

பார்த்தே இவ்வுலகில்
-----நாளும் நடந்துகொண்டால்
நாலும் தெரியவரும்
-----நன்மைகள் தேடிவரும்
வாழ்க்கை வாழ்வதற்கே
-----வளங்கள் கொழிக்கவே
வாழ்வாதாரம் சிறக்கவே
-----பழமையை மறக்காமல்
புதியனவை ஒதுக்காமல்
-----உண்மை உழைப்புடன்
மூத்தோர் சொல்கேட்போம்
-----வாஞ்சையுடன் வளர்வோம்
துன்பம் துரத்தினாலும்
-----துவண்டிட வேண்டாவாம்
புயலுக்குப்பின் அமைதிவந்திடும்
-----இறைவன் வகுத்தவிதியாகும்
சோர்வுதனை துரத்திடுவோம்
-----சுறுசுப்பை கொண்டிடுவோம்
மனிதம் பேணிடுவோம்
-----உலகையே வென்றிடுவோம் !

ராஜா வாவுபிள்ளை

No comments: