Saturday, January 7, 2017

புயலடித்து ஓய்ந்து விட்டது..

Saif Saif

என்மனதில் காதல் புயல் இப்போது தானே மையம் கொண்டுள்ளது..
என்னவளே தெரியுமா உனக்கு..!!??
உன் விழிகளை பார்த்து தான் இறைவன் மீன்களை படைத்தானோ என்னவோ அதனால் தான் நான் மீன்களே சாப்பிடுவதில்லை என்னவளே தெரியுமா உனக்கு..!!??
உன் பற்களை பார்த்து தான் இறைவன் முத்துக்களை தந்தானோ என்னவோ அதனால் தான் முத்துக்கள் விலையுயர்ந்து போகிறதோ என்னவளே தெரியுமா உனக்கு...!!??
உன் பாதம் பட்ட மணற் பரப்பில் என் பாதம் பதிக்க ஆசைப் பட்டு எங்கே சுவடு அழிந்து விடுமோ என பதிக்காமல் திரும்பி சென்றது என்னவளே தெரியுமா உனக்கு..!!??

உனை பார்க்கும் ஆசையில் ஆவலாய் வரும் போது கதவை படாரென அறைந்து சடாரென தாழ்பாள் போடுகையில் நெஞ்சம் நொறுங்கி சிதறியதே என்னவளே தெரியுமா உனக்கு..!!??
உனக்கு மனமிருந்தால் என் நினைவிருந்தால் உன் எழில் கொஞ்சும் பூ முகத்தை தினமும் எனக்காக ஒருமுறை காட்டுவாயா...
என்னவளே.. !!??

Saif Saif

No comments: