Sunday, January 29, 2017

காட்சியும் கற்பனையும் ...

Abdul Gafoor

இறைவன் படைத்த
ஆகாய புறங்களை
ஓயாமல் வட்டமிட்டு
உருளும் மேகங்களின்
வனப்பு மேனிகளில்
சுருளும் நிறங்களை
சாயாமல் பார்க்கும்
விழிகள் பிரமிக்குது ....
வண்ணங்களின் தூவலாய்
காற்றினில் அசைந்தாடும்
சிங்கார மலர்கள்
வானை நோக்கி
ஆவலாய் சிரிக்குது ....
தேனை உறிஞ்சிட
தாவலாய் புறப்படும்
ரீங்கார வண்டுகள்

ஒய்யாரமாய் அமர்ந்திட
இதழ்களை விரிக்குது ....
நடனமாடும் மலர்கள்
களைந்த வாசத்தையும்
முகில்களின் ஊர்வலத்தில்
விளைந்த சாகசத்தையும்
ரசித்து புசிக்குது
வளைந்த மலைகள் ....
அப்துல் கபூர்
29.01.2017 ...
இந்த படத்தை
இன்று தந்து உதவியவர்
அன்புச் சகோதரர்
Mohamed Saleem 
(முன்னாள் சலீம் பீமா)
உளமார்ந்த நன்றி ....

Abdul Gafoor

No comments: