Friday, February 10, 2017

சிந்தனைகள் பயணிக்கிறது ...

நட்பின்றி
மனங்கள் இணையாது
மனங்களின்றி
நட்பு கனியாது ....
உள்ளமின்றி
அன்பு பெருகாது
அன்பின்றி
உள்ளம் உருகாது ....
உறவுகளின்று
நேசம் மலராது
நேசமின்றி
உறவுகள் புலராது ....
உழைப்பின்றி
ஊதியம் பெறப்படாது
ஊதியமின்றி
உழைப்பு புறப்படாது ....
அறிவின்றி
கல்வி புலப்படாது

கல்வியின்றி
அறிவு பலப்படாது ....
பார்வையின்றி
விழிகள் பயன்படாது
விழிகளின்றி
பார்வை பயணப்படாது ....
மண்ணின்றி
தாவரங்கள் விளையாது
தாவரங்களின்றி
மண் செழிக்காது ....
எழுத்துகளின்றி
வார்த்தைகள் வாராது
வார்த்தைகளின்றி
எழுத்துகள் சேராது ....
இரவின்றி
விண்மீன்கள் உலவாது
விண்மீன்களின்றி
இரவு நிலவாது ....
புன்னகையின்றி
முகங்கள் ஒளிராது
முகங்களின்றி
புன்னகை மிளிராது ....
தொழுகையின்றி
சொர்க்கம் வசப்படாது
சொர்க்கமின்றி
தொழுகை நிசப்படாது ....
அப்துல் கபூர்

Abdul Gafoor

No comments: